மனித நேயப் பணிக்காக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.முஹம்மட் நஸீர் ஒலுவில் மக்களுக்கு உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைப்பு.


கொரோனா தாக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் வாழ்வாதாரம் இழந்த குடும்பங்களுக்கு முதல் கட்டமாக 60 இலட்சம் ரூபா தனது சொந்த செலவில் உலர் உணவுப் பொதிகளை வழங்குவதற்காக, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்பீட உறுப்பினரும், முன்னாள் பாராளுமன்ற உறுபினருமான ஏ.எல்.முஹம்மட் நஸீர் அவர்கள் நேற்று ஒலுவில் மக்களுக்கு ஒரு தொகுதி பெறுமதியிலான உலர் உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிவாரணப் பொருட்கள் அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளர் ஏ.எல்.அமானுல்லா, பிரதேச சபை உறுப்பினர் எஸ்.எம் அமீன் உள்ளிட்டோருக்கு கையளித்து வைக்கப்பட்டது.
இதன் போது அட்டாளைச்சேனை பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எஸ்.எம்.உவைஸ், தமீன் ஆப்தின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -