மகிந்தானந்த போன்றோரின் இனவாத நச்சுக்கருத்துக்களே எம் நாட்டை சிதைக்கத்தூண்டுகிறது : தே.கா வேட்பாளர் றிஷாத் ஷரீப்


நூருள் ஹுதா உமர்-
மே 19 அன்று இலங்கைக்கு குவைத் நாட்டிலிருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் தொடர்பாக தொலைக்காட்சி கலந்துந்துரையாடல் ஒன்றில் பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அழுத்கமகே அவர்கள் எந்த ஆதாரமுமின்றி மேற்கொண்ட குற்றச்சாட்டுகளுக்கு எனது வன்மையான கண்டனத்தையும் மனவருத்தத்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

குவைத் நாட்டில் இருந்து அனுப்பப்பட்ட இலங்கையர்கள் பெரும்பான்மையானோர் கொரோனா வைரஸ் தொற்றுடன் இலங்கைக்கு அனுப்பப்பட்டார்கள் என்றும் அதை குவைத் அரசு திட்டமிட்டு மறைத்து அவர்களை நாட்டுக்கு அனுப்பி வைத்துள்ளதாகவும் ,
அதுமட்டுமன்றி அவர்களை கொரோனா மனித குண்டுகளாக அந்த குறிப்பிட்ட கலந்துரையாடலில் அவர் சித்தரித்துள்ளார். இது வன்மையாக கண்டிக்கப்பட வேண்டிய கூற்றாகும் என கல்முனை தொகுதி தேசிய காங்கிரஸ் வேட்பாளரும், பிரபல உயிரியல் பாட ஆசிரியருமான றிஷாத் ஷரீப் தெரிவித்தார்.
குவைத் நாட்டிற்கான இலங்கை தூதுவர் அளித்த தகவலின்படி,
இலங்கைக்கு திருப்பி அனுப்ப தெரிவு செய்யப்பட்டிருந்த 466 பேர் கொண்ட குழு மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் அவர்களில் நான்கு பேர் நோய் அறிகுறிகளை கொண்டிருந்ததாகவும் அவர்கள் நால்வரும் மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டதாகவும், அந்த நால்வரில் ஒரு நபர் மட்டுமே கொரோனா வைரஸ் தாக்கத்திற்கு உட்பட்டு இருந்ததாக தெரிவித்திருந்தார்.
இந்த தகவல்களை 'எத்தேரா அப்பி' எனப்படுகின்ற வெளிநாடுகளில் பணிபுரிகின்ற இலங்கையர்களை கொண்ட அமைப்பின் குவைத் கிளையின் தலைவர்
திரு. ஜூட் லிவேரா தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியிருந்தார்.

ஆளும் கட்சியில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் இவ்வாறான ஆதாரமற்ற கருத்துக்களை தெரிவிப்பதன் மூலம் எமக்கு பாரியளவிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகின்றன வெளிநாடுகளில் வசிக்கின்ற, இந்த கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவிக்கின்ற எமது நாட்டு உறவுகளை மேலும் உளரீதியாக காயப்படுத்துவது மட்டுமில்லாமல் இவ்வாறான கருத்துக்களின் மூலம் அவர்களுக்கு இலங்கை அரசின் மீது கொண்டுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்வதோடு,
குவைத் போன்ற மத்தியகிழக்கு நாடுகளுடன் இலங்கை அரசுக்குள்ள இராஜாங்க உறவுகளில் விரிசலை ஏற்படுத்த வாய்ப்புகள் உள்ளதுடன் இதன் மூலம் அங்கு தொழில் நிமித்தம் வசிக்கின்ற இலங்கையர்ககளுக்கு மேலும் பல நெருக்கடிகளுக்கு முகம்கொடுக்கவேண்டி வரும் என்பதை கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் சிந்தனையில் கொள்ள வேண்டும் என நான் வேண்டிக் கொள்கிறேன்.
மத்திய மாகாணத்தில் முஸ்லிம்களின் வாக்குகளுடன் பாராளுமன்றம் நுழைந்த மஹிந்தானந்த அளுத்கமகே அவர்கள் முஸ்லிம்களுக்கு எதிரான பல இனவாத கருத்துக்களையும் அண்மைக்காலமாக தெரிவித்து வருகின்றார் என்பதையும் நான் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

ஒரு இலங்கை குடிமகன் என்ற வகையில் இவ்வாறான இனவாத கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதோடு எமது நாட்டினுள் இனங்களுக்கு இடையிலான விரிசல்கள் உருவாவதற்கு வழிகோலாது தமது அரசியல் பிரச்சாரங்களை முன்னெடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். மேலும் சர்வதேச ரீதியில் இலங்கைக்கு நெருக்கடிகள் வராமல் செயற்படுமாறும் அது தாங்கள் சார்ந்திருக்கும் அரசுக்கு விரும்பத்தக்கதாக இருக்குமென்றும் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அவர்களுக்கு ஞாபகமூட்ட விரும்புகின்றேன். என தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -