அமரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறையில் அஞ்சலி


பாறுக் ஷிஹான்-
மரர் ஆறுமுகன் தொண்டமானுக்கு அம்பாறை மாவட்டத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

கல்முனை பாண்டிருப்பு எல்லைப்பகுதியில் உள்ள ஸ்ரீ அரசடி அம்மன் ஆலயத்தின் முன்பாக இடம்பெற்றது அருகில் உள்ள பொதுக்கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை(31) முற்பகல் ஆறுமுகன் தொண்டமானின் உருவப்படம் வைக்கப்பட்டு அவருக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும் இவ்வஞ்சலி நிகழ்வை கல்முனை பாண்டிருப்பு வாழ் இளைஞர்கள் ஏற்பாடு செய்துள்ளதுடன் இந்த அஞ்சலி நிகழ்வில் சிவ ஸ்ரீ தங்கவேல் குருக்கள் சமூக சேவகர்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்

இதே வேளை கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பகுதியிலும் இளைஞர்களினால் அமரர் தொண்டமானின் உருவப்பட பதாதை அஞ்சலி செலுத்தும் முகமாக சந்திக்கு சந்தி தொங்கவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -