மலையகப்பகுதியில் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருகின்றன.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக அமுல் படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் கொழும்பு மற்றும் கம்பகஹா தவிர்ந்த ஏனைய 23 மாவட்டங்களில் இன்று (11) காலை 5.00 மணிக்கு தளர்த்தப்பட்டதனை தொடர்;ந்து அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருகின்றன.
மலையகப்பகுதியிலும் அரச மற்றும் தனியார் துறைகளின் பணிகள் வழமைக்கு திரும்பி வருவதனை காணக்கூடியதாக இருந்தன.
பணிகளுக்கு செல்வோரின் நலன் கருதி இன்று காலை முதல் இலங்கை போக்குவரத்து சேவைக்கு சொந்தமான பஸ்களும் தனியார் பஸ்களும் சேவைகளை ஆரம்பித்திருந்தன.
இதில் பெரும்பாலான பஸ்களில் சுகாதார பொறிமுறைக்கமைய சேவைகள் நடைபெறுவதனை காணக்கூடியதாக இருந்தன. பொது மக்கள் மற்றும் அத்தியவசிய சேவையில் ஈடுபடுபவர்கள் முக்கு கவசம் அணிந்து இடைவெளி விட்டு அமர்ந்திருப்பதனை காணக்கூடியதாக இருந்தன.
நகரங்களின் ;வர்த்தக நடவடிக்கைகளும் வழமை போன்று இடம்பெற்றன. அத்தியவசி தேவைகளுக்கு மாத்திரம் மக்கள் நகரங்களுக்கு வர வேண்டும். என்று கேட்டுக்கொண்டிருந்தமையினால் ஏனைய நாட்களை விட மிக குறைவான மக்களே நகரங்களை நோக்கி வருகை தருவதனை காணக்கூடியதாக இருந்தன.
தபால் சேவைகளும் இன்று வழமை போல் இடம்பெற்றன. இதன் போது அரச அலுவலகங்களில் தொற்று நீக்கிகள் தெளிக்கப்பட்டதன் பின் தங்களது கடமைகள் ஆரம்பிப்பதனை காணக்கூடியதாக இருந்தன.அதே போன்று நீதி மனறங்கள்,அரச மற்றும் தனியார் வங்கிகள் கல்வி அலுவலகங்கள்,ஆடைத்தொழிற்சாலைகள் உட்பட அனைத்து நிறுவனங்களின் செயப்படுகளும் இன்று வழமைக்கு திரும்பியிருப்பதனை காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் மலையகத்திற்கான புகையிரத சேவைகள் மாத்திரம் இன்று இடம்பெறவில்லை. ஏனைய சேவைகள் வழமை போலவே இடம்பெற்றன.
இன்று காலை முதல் சத்தோச விற்பனை நிலையங்கள் காலை முதல் திறக்கப்பட்டிருந்த போதிலும் ஏனைய நாட்களை போல் நீண்ட வரிசை காணப்படவில்லை. சாதாரண நாட்களை போன்றே வாடிக்கையாளர்கள் பொருட்களை கொள்வனவு செய்வதனை காணக்கூடியதாக இருந்தன.
இதே நேரம் அரசாங்க அறிவுறுத்தல்களுக்கமைய பாடசாலைகள் தனியார் கல்வி நிறுவனங்கள் தொடர்;நதும் மூடப்பட்ட நிலையிலேயே இருந்தமையும் குறிப்பிடத்தக்கது.
இதே நேரம் மலையகத்தில் உள்ள சில்லைறை விற்பனை நிலையங்களில் எங்கர் பால்மாவுக்கு தட்டுப்பாடு நிலவுவதாகவும் ஹட்டன் ஒரு சில வர்த்தக நிலையங்களில் ஏனைய பொருட்கள் கொள்வனவு செய்தால் மாத்திரம் எங்கர் பால் தருவதாக தெரிவிப்பதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -