மனிதம் காப்போம் மருத்துவப் பரிசோதனையும் சத்துணவு வழங்களும்


ஹஸ்பர் ஏ ஹலீம்-
மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட அடையாளம் காணப்பட்ட விசேட தேவையுடைய 10 சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் இலவசமாக இடம்பெற்றத்தோடு அவர்களுக்கான சத்துணவுப் போதிகளும் வழங்கி வைக்கப்பட்டன.

குறித்த நிகழ்வு நேற்று (17) மூதூர் பகுதியில் இடம் பெற்றது. இதனை மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஜெஸ்மி மற்றும் ,டாக்டர் சுபியான் மற்றும் முஸவ்மி ஆசிரியர் ஆகியோர்கள் இணைந்து We4U அமைப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இவ் அசாதாரண சூழ்நிலையில் மூதூர் பிரதேசத்தில் வசித்துவருகின்ற விசேட தேவையுடைய பிள்ளைகளின் ஆரோக்கிய நிலை பாதிக்கப்பட்டு காணப்பட்ட வேலையில்

டயமன் விஷேட பாடசாலையின் அதிபர் செல்வி. அகீதா நசார் அவர்களின் வேண்டுகோளுக்கு இனங்க WE4U அமைப்பின் அனுசரணையில் குறித்த மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை அவர்களின் வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளப்பட்டதோடு, சத்துணவுப்பொதிகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -