ஊரடங்குச் சட்ட காலப்பகுதில் சட்ட விரோதமான முறையில் இருவேறு பிரதேசங்களில் மாணிக்ககல் அகழ்வில் ஈடுபட்ட ஏழு பேர் பொகவந்தலாவை பொலிசாரால் கைது


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ரடங்குச் சட்ட காலப்பகுதியில் பொகவந்தலாவை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொகவந்தலாவை பிரிட்வெல்,பெட்ரசோ ஆகிய இருவேறு பிரதேசங்களில் சட்டவிரோதமான முறையில் அனுமதிப்பத்திரமின்றி மாணிக்கக்கல் அகழ்வில் ஈடுபட்ட நபர்களை பொகவந்தலாவ பொலிஸார் நேற்று (01) இரவு கைது செய்யப்பட்டுள்ளதாக பொகவந்தலாவை பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிசாருக்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்து நேற்று (01) இரவு சுற்றிவளைப்புகளை மேற்கொண்ட போலிசார் குறித்த சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் பிரிட்வெல்; மற்றும் பெட்ரசோ தோட்டங்களைச் சேர்ந்தவர்கள் என போலிசார் மேற்கொண்டனர் ஆரம்பகட்ட விசாரணை தெரியவந்துள்ளன.
குறித்த நபர்களிடமிருந்து மாணிக்க கல் அகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட பொருட்களும் பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டு சந்தேகநபர்கள் மற்றும் உபகரணங்கள் எதிர்வரும் 13ஆம் திகதி அட்டன் நீதவான் முன்னிலையில் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக பொலிசார் மேலும் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொகவந்தலாவை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -