தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டமை தொடர்பில் மேற்கொண்ட முறைப்பாடுகளுக்கு பதில் இல்லை-மஞ்சுள கஜநாயக

2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது தேர்தல் சட்டங்கள் மீறப்பட்டமை தொடர்பில் அனுப்பப்பட்ட முறைப்பாடுகளுக்கு, தேர்தல் ஆணையகம் இதுவரை பதில் அளிக்கவில்லை என தேர்தல் வன்முறைகளை கண்காணிப்பதற்கான நிலையத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுள கஜநாயக அவர்கள் தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகளுக்கு எதிராக, அபேட்சகர்களுக்கு எதிராக மற்றும் ஒரு சில அரச ஊழியர்கள் மற்றும் அரச பொது பணிப்பாளர்களுக்கு எதிராக, குறிப்பாக அப்போதிருந்த சமூர்தி அத்தியட்சகர் உட்பட அரச அதிகாரிகள் பலர் பற்றி நாங்கள் முறைப்பாடுகளை அளித்திருந்தோம். எனினும் இதுவரை எமக்கு தேர்தல் ஆணையகம் அந்த முறைப்பாடுகளுக்கு எதிராக எடுத்த நடவடிக்கைகள் பற்றி எதுவுமே அறியத்தரவில்லை.

அத்துடன் தற்போதைய சமுர்த்தி அத்தியட்ட்சகரின் செயல்பாடுகள் உட்பட பல்வேறுபட்ட தேர்தல் சட்ட மீறல்கள் பற்றி நாங்கள் தேர்தல் ஆணையகத்துக்கு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளோம். என்ற போதிலும் அவ்வாறான முறைப்பாடுகள் தமக்கு கிடைத்துள்ளது, என்று கூட எமக்கு இதுவரை அவர்கள் எவ்வித பதில்களையும் அளிக்கவில்லை என்று மஞ்சுள கஜநாயக மேலும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -