DR. சுக்ரி அவர்களின் மறைவு மிகுந்த மனவேதனை அளிக்கிறது ! எஹியாகான் அனுதாபம்.


ஜாமியா நளீமியாவின் பணிப்பாளரும் நாட்டின் மூத்த புத்திஜீவியுமான கலாநிதி எம்.ஏ.எம்.சுக்ரி அவர்களின் மறைவு மிகவும் வேதனை அளிப்பதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய பிரதி பொருளாளர் எ.சி.எஹியாகான் விடுத்துள்ள அநுதாபச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நான் மிகுந்த கவலையும் மன வேதனையும் அடைந்தேன்.
எல்லாம் வல்ல இறைவன் - அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் அனைவருக்கும் சிறந்த மனவலிமையை கொடுத்து அவர்களின் கவலையையும் போக்க வேண்டும்.
இந்த புனிதமான ரமழான் மாதத்தில் இவரின் ரூகை அல்லாஹ் எடுத்திருக்கின்றான். இந்த சங்கை பொருந்திய மாதத்தில் அன்னாரின் சகல பாவங்களையும் மன்னித்து மேன்மையான ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் சுவர்க்கத்தை பரிசளிக்க வேண்டுமென்று நானும் எனது குடும்பமும் இறைவனிடம் பிரார்த்திக்கின்றோம் . ஆமீன் யாரப்பல் ஆலமீன்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -