குச்சவெளி வடலிக்குள கிராமத்தில் ஏற்கனவே வழங்கப்பட்டுக் கொண்டிருந்த குழாய் நீர் விநியோகம் அங்கு பொருத்தப்பட்டிருந்த நீர்பம்பி பழுதடைந்துள்ளதால் அப்பகுதிக்கான நீர் விநியோகம் நீண்ட நாட்களாக தடைப்பட்டு மக்களுக்கு நீர் விநியோகிக்கப்படாமல் காணப்படுகிறது. இவ்விடயம் தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என தவிசாளரிடம் குச்சவெளியில் செயற்பட்டு வரும் வை எம். எம். ஏ கிளையின் தலைவர் என்.ரபாய்தீன் மற்றும் செயலாளர் எம்.எம்.யாசீர் அரபாத் ஆகியோர் குச்சவெளி தவிசாளர் ஏ.முபாரக்கிடம் மகஜரினை இன்று(2) கையளித்தார்கள்.
இவ்விடயத்தை கவனத்தில் கொண்டு மக்களின் நலன்கருதி பிரதேச சபையின் தவிசாளர் ஏ.முபாரக் அவர்கள் தலைமையில் அவ் வட்டாரத்துக்கு பொறுப்பான பிரதேச சபையின் உப தவிசாளர் ஏ.எஸ்.எம்.சாஜித் அவர்களுடன் கலந்துரையாடி விரைவில் வடலிக்குள கிராமத்துக்கான நீர் விநியோகத்தை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும் இதன் போது மகஜர் கையளித்தவர்களிடம் தவிசாளர் தெரிவித்தார்.