ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை ஏற்றுக் கொள்ள தயார் சஜீத் தெரிவிப்பு.

ஜே.எப்.காமிலா பேகம்-

திர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்கு பின்னர், சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டிருந்தார்..

ஐக்கிய தேசிய கட்சிப் பதவியில் தொடர்ந்தும் இருக்க வேண்டும் என, ரணில் விக்ரமசிங்க கூறுகின்ற நிலையில், அதற்கு சந்தர்ப்பத்தை வழங்கி தாம் அமைதியான முறையில் வேறு கூட்டமைப்பொன்றை உருவாக்கியதாக அவர் கூறினார்.

எனினும், எதிர்வரும் ஆகஸ்ட் ஐந்தாம் திகதிக்குப் பின்னர் சிறிகொத்தவில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைக பொறுப்பை தாம் ஏற்றுக் கொள்வதாக உறுதியளிப்பதாக சஜித் பிரேமதாஸ சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, தாம் அமைதியாக இருந்தாலும், இன்னும் பலமாகவே உள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியைப் பிரதிநித்துவப்படுத்தும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இந்த நிலையில், தாம் எழுந்தவுடன் யாராலும் அதனை வீழ்த்த முடியாது என ரவி கருணாநாயக்க மேலும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -