நூருல் ஹுதா உமர்-எம்.எம். ஜெஸ்மின்-
சர்ச்சைக்குரிய கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் நியமனம் தொடர்பான இறுதி தீர்ப்பினை திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசர் இளஞ்செழியன் நேற்று வழங்கினார்.திருகோணமலை மாவட்ட மேல் நீதிமன்றத்தில் இன்று காலை 10 மணிக்கு இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதன்போது கிழக்கு மாகாணத்தின் கல்விப் பணிப்பாளராக எம்.கே.எம் மன்சூர் தொடர்ந்தும் நீடிப்பார் என தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. முன்னதாக தீர்ப்பிற்கான திகதி பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் கொரோனா தொற்று காரணமாக ஊரடங்குச் சட்டம் நடைமுறையில் இருப்பதால் இறுதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்ட நிலையிலேயே இன்று காலை அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தின் புதிய கல்விப்பணிப்பாளர் மன்சூரா ?,நிஸாமா? என்கிற எதிர்பார்ப்பு பரவலாக உள்ள நிலையிலேயே இத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.