ஊரடங்கு தளர்வு நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு: உலக சுகாதார அமைப்பிலிருந்து விலகுகிறதா பிரேசில்?


லக சுகாதார அமைப்பிலிருந்து பிரேசில் விலகப்போவதாக அந்நாட்டின் அதிபர் ஜெய்ர் போல்சொனாரோ எச்சரித்துள்ளார்.
தென் அமெரிக்கப் பகுதியில் நிலவும் கொரோனா பாதிப்பு கவலைக்குரியது என்றும் வைரஸ் பரவல் குறைவதற்கு முன் ஊரடங்கைத் தளர்த்துவது அபாயகரமானது என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரித்திருந்தது.

கொரோனா பரவலில் உலக அளவில் இரண்டாவது இடத்தில் இருக்கும் பிரேசிலில் ஊரடங்கு நடவடிக்கைகளுக்கு அதிபர் போல்சொனாரோ எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். வைரஸ் தொற்று, பொதுச்சுகாதாரத்தை விட பொருளாதாரத்திற்கு அதிக ஆபத்தை விளைவித்திருப்பதாக அவர் தொடர்ந்து கூறி வருகிறார்.

இந்நிலையில் உலக சுகாதார நிறுவனத்தின் எச்சரிக்கைக்குப் பதிலளித்த அவர், அரசியல் சார்புடைய அமைப்பாக இருப்பதை உலக சுகாதார நிறுவனம் நிறுத்தவில்லை என்றால் பிரேசில் அந்த அமைப்பிலிருந்து விலகும் என்று எச்சரித்தார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -