முன்னால் சென்ற மோட்டார் சைக்கள் மீது பின்னால் வந்த பட்டா மோதியதில் முகம்மது கலீல் என்பவர் பலி.

எச்.எம்.எம்.பர்ஸான்-

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வாகனேரி, மீயான்குளப் பகுதியில் இன்று (14) காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஓட்டமாவடி பகுதியில் இருந்து மோட்டார் கைக்கிளில் பயணித்துக்கொண்டிருந்த நபர் மீது பின்னால் சென்ற சிறிய ரக பட்டா வாகனம் மோதியதில் குறித்த நபர் பட்டா வாகனத்துடன் நீண்ட தூரம் இழுபட்டுச் சென்று உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

விபத்தில் மரணமடைந்த நபர் ஓட்டமாவடி முதலாம் வட்டாரம், முக்தார் வீதியைச் சேர்ந்த ஆறு பிள்ளைகளின் தந்தையான வரிசை முகம்மது கலீல் (வயது 50) என்பவராவார்.

குறித்த விபத்தில் உயிரிழந்தவரின் உடல் பிரேதப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

விபத்தை ஏற்படுத்திய நபரை வாழைச்சேனை பொலிஸார் கைது செய்துள்ளதோடு, மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -