உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபயொருவர் விளக்கமறியலில்


எப்.முபாரக்-
யிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபயொருவரை இம்மாதம் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற நீதிவான் பி.சிவக்குமார் இன்று(10) உத்தரவிட்டார்.
இகலான்நொச்சிய,ஹொரொவப்பொத்தான பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.சந்தேக நபர் புல்மோட்டை பகுதியில் திருமணம் முடித்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு ஊக்குவித்த அபுசாலி அபுபக்கருக்கு உதவி வழங்கிய சந்தேகத்தின் அடிப்படையில் சந்தேக நபரை புல்மோட்டை பிரதேசத்தில் வைத்து புல்மோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்ததாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சவுதி அரேபியாவிலிருந்து அபுசாலி அபுபக்கர் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்ட நிலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் அடிப்படையில் குறித்த நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிமன்றில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -