திருகோணமலை மாவட்டத்தின் குடிநீர் பிரச்சினை குறித்த சந்திப்பில் எம்.எஸ்.தௌபீக் எம்பி


எப்.முபாரக்-


திருகோணமலை மாவட்டத்தின் சில பகுதிகளில் குறிப்பாக கிண்ணியா, தோப்பூர் போன்ற பிரதேசங்களில் நிலவிவருகின்ற குடிநீர் பிரச்சினை சம்மந்தமாக இன்று(31) தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கிழக்கு மாகாண பிரதி முகாமையாளர் திரு. சுதேசன் அவர்களை திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் சந்தித்து கலந்துரையாடினார்.

இதன் போது பாராளுமன்ற உறுப்பினர் மூதூர்,தோப்பூர் மற்றும் கிண்ணியா போன்ற பகுதிகளில் குடிநீர் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடினார்.
அதனை தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை தாம் மேற்கொள்வதாகவும் கிழக்கு மாகாண நீர்வழங்கால் பிரதி முகாமையாளர் தெரிவித்ததாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் கூறினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :