கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை.


எச்.எம்.எம்.பர்ஸான்-
ல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (1) சனிக்கிழமை செம்மண்ணோடைப் பகுதியில் இரு இடங்களில் நடைபெற்றன.

கொவிட் – 19 காரணமாக சனநெரிசலை கட்டுப்படுத்தி, சமூக இடைவேளிகளை பேணும் நோக்கில் இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை இரு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் தொழுகை மற்றும் குத்பா உரையினை ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களும், செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொழுகை மற்றும் குத்பா உரையினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களும் நிகழ்த்தினர்.
குறித்த தொழுகையினை நிறைவேற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு, தொழுகை சுகாதார முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளைப் பேணி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :