கல்குடா ஜம்இய்யது தஃவதில் இஸ்லாமியா ஏற்பாடு செய்த புனித ஹஜ் பெருநாள் தொழுகை இன்று (1) சனிக்கிழமை செம்மண்ணோடைப் பகுதியில் இரு இடங்களில் நடைபெற்றன.
கொவிட் – 19 காரணமாக சனநெரிசலை கட்டுப்படுத்தி, சமூக இடைவேளிகளை பேணும் நோக்கில் இம்முறை ஹஜ் பெருநாள் தொழுகை இரு இடங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டதென்று நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.
கோறளைப்பற்று மத்தி வாழைச்சேனை பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட செம்மண்ணோடை அல் ஹம்ரா வித்தியாலய மைதானத்தில் தொழுகை மற்றும் குத்பா உரையினை ஜம்இய்யாவின் பொதுத் தலைவர் ஏ.எல்.பீர் முகம்மட் காஸிமி அவர்களும், செம்மண்ணோடை ஜெமீலா அரிசி ஆலை வளாகத்தில் நடைபெற்ற தொழுகை மற்றும் குத்பா உரையினை தியாவட்டவான் தாருஸ்ஸலாம் அரபுக் கல்லூரின் அதிபர் எம்.பீ.எம்.இஸ்மாயில் மதனி அவர்களும் நிகழ்த்தினர்.
குறித்த தொழுகையினை நிறைவேற்ற ஆண்கள், பெண்கள் ஆகியோர்கள் கலந்து கொண்டதோடு, தொழுகை சுகாதார முறைகளைப் பின்பற்றி சமூக இடைவெளிகளைப் பேணி நடாத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment