பஸில் படுகொலை சதி- மஹிந்த வெளியிட்ட அதிர்ச்சி தகவல்!

ஜே.எப்.காமிலா பேகம்-


ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பஸில் ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் இடம்பெறுவதாக வெளியான தகவல் குறித்து பிரதமர் மஹிந்த ராஜபக்ச கருத்து தெரிவித்திருக்கின்றார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாத்தறை மாவட்டத்தில் மொட்டுக் கட்சியில் போட்டியிட்டவருமான லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன அண்மையில் ஊடக சந்திப்பை நடத்தி இந்த சதித்திட்டம் குறித்த தகவல்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த தகவல் பிரதமர் மஹிந்தவின் காதுகளுக்கு எட்டியுள்ளது.

இதுபற்றி கருத்து தெரிவித்திருக்கும் அவர், லக்ஸ்மன் யாப்பா மாத்தறை மாவட்டத்தில் தோல்வியடைந்துவிடுவார் என்ற அச்சத்தினால் இப்படியான போலித்தகவலை வெளியிட்டிருக்கலாம் என்று கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :