உகந்த மலையானின் ஆடிவேல் தீர்த்தோற்சவம்.

காரைதீவு சகா-


ரலாற்றுப்பிரசித்திபெற்ற உகந்தமலை முருகனாலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா தீர்த்தோற்சவம் நேற்றுமுன்தினம்(4)செவ்வாய்க்கிழமை காலை 9மணியளவில் ஆலயபிரதமகுரு சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் பங்கேற்புடன் சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக அங்குகூடிய நூற்றுக்கணக்கான பக்தர்கள் கடற்கரைக்குச்சென்று கிரியையகளில் ஈடுபட்டு பின்னர் சுபநேரத்தில் தீர்த்தமாடினர்.

திருவோணம் காலை 9.15மணியளவில் நிறைவுறுவதால் அதற்கு முன்னதாக தீர்த்தம் ஆலயவண்ணக்கர் சுதுநிலமே திசாநாயக்க(சுதா) தலைமையில் ஆலயத்தின் கிழக்கேயுள்ள வங்காளவிரிகுடா சமுத்திரத்தில் வழமைபோன்று நடைபெற்றது.

தீர்த்தோற்சவத்தில் பங்கேற்பதற்காக நேற்றுமுன்தினமே நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்தை சென்றடைந்தனர்..

கடந்த 21ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமான இவ் ஆலயத்தின் வருடாந்த ஆடிவேல்விழா மஹோற்சவம் நேற்றுமுன்தினம் (4) செவ்வாய்க்கிழமை ஆலயதீர்த்தோற்சவத்துடன் நிறைவடைந்தது.ஆலயதிருவிழாசிறப்புப் பூஜைகளை ஆலயபிரதமகுருக்கள் சிவஸ்ரீ க.கு.சீதாராம் குருக்கள் உதவியாக சிவஸ்ரீ க.கு.சீ.கோவர்த்தன சர்மா ஆகியோர் நடாத்திவந்தமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :