அழைப்பு ஒன்றை எடுக்க வேண்டுமெனக் கூறி கைத்தொலைபேசியைத் திருடிச் சென்ற நபர்!


எச்.எம்.எம்.பர்ஸான்-
வீதியால் சென்ற நபர் ஒருவரிடம் அழைப்பு ஒன்றினை ஏற்படுத்துவதற்கு தொலைபேசியை தாருங்கள் என்று கேட்டு பெற்ற நபர் அதனைச் திருடிச் சென்ற சம்பவம் வாழைச்சேனையில் இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஆலங்குளம் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் வீதியில் அவருடைய நண்பரிடம் பேசிக் கொண்டு நின்ற போது அவ்வீதியால் மோட்டார் சைக்கிள் ஒன்றில் வந்த நபர் அழைப்பு ஒன்றினை எடுப்பதற்கு தொலைபேசியை கேட்டுள்ளார்.

உதவி எனும் நோக்கில் அந்நபர் தொலைபேசியை கொடுக்க மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அதை எடுத்து தப்பிச் சென்றுள்ளார்.

தொலைபேசியை பறிகொடுத்த நபர், நூதனத் திருடனை அடையாளம் காண வாழைச்சேனை பொலிஸாரின் உதவியை நாடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :