இம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள், எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர், பரீட்சை முடிவடையும் வரை முற்றிலும் தடை செய்யப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் என்பன, ஒக்டோபர் 7 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் தடை செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை,
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
0 comments :
Post a Comment