க.பொ.த. உயர்தரம் மற்றும் தரம் 05 மாணவர்களுக்கான கருத்தரங்குகளுக்கு தடை

ஐ. ஏ. காதிர் கான்-


ம்முறை க.பொ.த. உயர்தரப் பரீட்சை சம்பந்தப்பட்ட அனைத்து மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள், எதிர்வரும் ஒக்டோபர் 6 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர், பரீட்சை முடிவடையும் வரை முற்றிலும் தடை செய்யப்படுவதாக, பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை சம்பந்தப்பட்ட மேலதிக வகுப்புக்கள், கருத்தரங்குகள் மற்றும் பயிற்சிப் பட்டறைகள் என்பன, ஒக்டோபர் 7 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணிக்குப் பின்னர் தடை செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.
க.பொ.த. உயர்தரப் பரீட்சை, எதிர்வரும் ஒக்டோபர் 12 ஆம் திகதி ஆரம்பமாகி, எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.
இதேவேளை,
தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை, ஒக்டோபர் 11 ஆம் திகதி இடம்பெறவுள்ளதாக, பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :