53வயது பெண்ணை பாலியல் துஸ்பிரயோகம் செய்த நபருக்கு 15 வருட கடூழிய சிறை -திருமலையில் சம்பவம்

எப்.முபாரக் -

திருகோணமலையில் பெண்ணொருவருக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிக்காக குற்றவாளிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை விதித்து திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று (30) தீர்ப்பளித்துள்ளது.
2010ஆம் ஆண்டு நிலாவெளி கடற்கரைப் பகுதியில் உள்ள வீட்டில் நிலாவெளி இறக்கண்டியைச் சேர்ந்த சாஜகான் அல்லது பைரூஸ் என்ற எதிரியினால் 53 வயது நிரம்பிய சிங்களத் தாய் ஒருவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணை திருகோணமலை மேல் நீதிமன்றில் இடம்பெற்று வந்தது.

குறித்த பெண்மணி சாட்சியமளிக்கையில்: குறிக்கப்பட்ட எதிரி தன்னை துஸ்பிரயோகம் புரிந்ததாக நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.
வைத்திய கலாநிதி குறிக்கப்பட்ட பெண் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டதற்கான காயங்கள் இருப்பதாக நீதிமன்றில் சாட்சியம் அளித்தார்.

இதேவேளை வழக்கு தொடங்கும் போது நீதிமன்றில் ஆஜராகியிருந்த எதிரி தீர்ப்பின் போது நீதிமன்றில் ஆஜராகவில்லை என்பதுடன் நீதிமன்றிலிருந்து வெளியேறிவிட்டார்.

எதிரியை குற்றவாளி எனத் தீர்ப்பளித்த நீதிமன்றம் எதிரிக்கு 15 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை, ஐந்து இலட்சம் நட்டஈடு கட்டத்தவறும் பட்சத்தில் ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை, அத்துடன் தண்டப்பணம் 25000 ரூபா விதித்து தீர்ப்பளித்தார்.

எதிரிக்கு பகிரங்க பிடிவிராந்து பொலிஸ் மா அதிபர் ஊடாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு செல்லக்கூடாது என கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்கு பிணைகாரர்களின் பிணைமுறிப்பணம் நீதிமன்றில் பறிமுதல் செய்யப்பட்டது.

இதன்போது நீதிமன்றில் ஆஜராகிய சிங்கள தாய் தீர்ப்பளித்ததன் பின் நீதிமன்றில் எழுந்து நின்று கைகூப்பி வணக்கம் செலுத்தி நன்றி தெரிவித்துள்ளார். அப்பொழுது நீதிபதி அப்பெண்ணை நோக்கி குற்றவாளி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார் என தெரிவித்தா
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :