காரைதீவு பிரதேச சபை தவிசாளருக்கு திலீபன் நினைவேந்தல் கூட்டம்/ஊர்வலம் நடத்த தடை!

பாறுக் ஷிஹான்-


காரைதீவு பிரதேச சபைத் தவிசாளர் கே.ஜெயசிறிலுக்கு திலீபனின் நினைவேந்தல் தினக் கூட்டம் ஊர்வலத்தை நடத்த நீதிமன்றத் தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தடைசெய்யப்பட்ட இயக்கமான தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர்களுள் ஒருவரான திலீபனின் நினைவு தினத்தை நினைவுகூர தவிசாளர் ஜெயசிறில் நடவடிக்கை எடுத்துவருவதாக முறையிட்டிருப்பதால் அதனைத் தடுத்துநிறுத்த தடையுத்தரவு விதிக்குமாறு கோரி சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றுக்கு சம்மாந்துறைப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கே.டீ.எஸ்.ஜயலத் விண்ணப்பித்திருந்தார்.

இவ்வாறான கூட்டம்இ ஊர்வலம் போன்றவற்றால் பொதுமக்களுக்கும் பொதுச் சொத்துகளுக்கும் தடங்கல்கள், சேதம் ஏற்படவாய்ப்புள்ளது உள்ளதாகவும் எனவே அவற்றைத் தடைசெய்ய உத்தரவை வழங்குமாறும் கேட்டிருந்தார்.

அதனையேற்ற சம்மாந்துறை நீதவான் நீதிமன்றம், குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவையின்படி, மேற்படி நினைவேந்தல் கூட்டம், ஊர்வலம் என்பவற்றை நிறுத்துமாறு கட்டளை பிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :