கலாநிதி பட்டம் பெற்றார் சிரேஷ்ட ஊடகவியலாளர் றியாத் ஏ மஜீட்...

எஸ்.அஷ்ரப்கான்-


சிரேஷ்ட ஊடகவியலாளரும் சிலோன் மீடியா போரத்தின் தலைவருமான றியாத் ஏ மஜீட் அமெரிக்க உலக தமிழ் பல்கலைக்கழகத்தின் கெளரவ கலாநிதி பட்டம் பெற்றார்.

நேற்று (19) மாலை கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் விஸ்வம் பல்கலைக்கழகத்தின் விருது வழங்கும் விழா - 2020 இடம்பெற்றது.

விஸ்வம் பல்கலைக்கழகத்தின் பிரதி தவிசாளர் தரிந்து விஜேயநாயக்கவின் தலைமையில் இடம்பெற்ற
இவ்விழாவில் சிலோன் மீடியா போரத்தின் தலைவரான சிரேஷ்ட ஊடகவியலாளர் றியாத் ஏ.மஜீட்

அமெரிக்க உலக தமிழ் பல்கலைக் கழகத்தினால் ஊடகத்துறை மற்றும் சமூக சேவைக்கான கெளரவ கலாநிதி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

சாய்ந்தமருதை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட றியாத் ஏ.மஜீட், 25 வருட கால அரச சேவை அனுபவத்தையும் 25 வருட கால சமூக சேவை மற்றும் 11 வருட கால ஊடகப் பணி ஆகியவற்றில் சிறந்த சேவையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் அதிதிகளாக பேராசிரியர் கலாநிதி றொஹான் டீ சில்வா, ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்ஸவின் ஊடக செயலாளர் சாகல ரத்னாயக்க, யாழ்ப்பாண மாநகர முதல்வர் ஆர்ணல்ட் ஆகியோர் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

இங்கு சுமார் 25 நபர்கள் பட்டம் வழங்கி கெளரவிக்கப்பட்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :