இது தொடர்பில் மன்னார் வவுனியா மற்றும் முல்லைத்தீவு மாவட்ட அரச அதிபர்களுக்கு கடிதங்களை அனுப்பி வைத்துள்ளதுடன் பிரதேச செயலாளர்கள் கிராம அதிகாரிகள் சமூர்த்தி உத்தியோகத்தர்கள் மற்றும் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆகியோர் மூலம் வன்னி மாவட்டத்தின் அனைத்து பொது மக்களுக்கும் இதனை அறிவுறுத்தி விழிப்புணர்வூட்டுமாறு அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.
இதற்காக தயாரிக்கப்பட்ட விண்ணப்பப் படிவங்களை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் அவர்களின் மாவட்ட அலுவலகங்களில் அல்லது அவரது இணைப்பாளர்கள் மற்றும் அந்தந்த பகுதி கிராம அதிகாரிகளிடம் பெற்று இம்மாதம் 30 ம் திகதிக்கு முன் சமர்ப்பிக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
அரச காணிகளில் குடியிருப்பவர்கள்,விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் மற்றும் ஏனைய அபிவிருத்தி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதமாக அமையும் என கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் தெரிவித்ததுடன் இந்த சந்தர்ப்பத்தை வன்னி மாவட்ட மக்கள் உரிய முறையில் பயன்படுத்திக்கொள்ள வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.
0 comments :
Post a Comment