இலங்கையிலும் தேசிய பாதுகாப்புக்குப் பாதிப்பு அல்லது சவால் ஏற்படும் பல செயலிகள் இருப்பதாக இலங்கை தகவல் தொழில்நுட்பசங்கம் அரசாங்கத்திற்கு கடிதம் ஒன்றை அனுப்பி சுட்டிக்காட்டியுள்ளது.
குறிப்பாக இந்திய அரசாங்கம் சுமார் 244 செயலிகளை தேசிய பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு தடை செய்தது.
அமெரிக்க அரசாங்கமும் பல செயலிகளை தடை செய்திருக்கிறது.
அந்த வகையில் இலங்கையிலும் பாவனையிலுள்ள ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசிகளில் தேசிய பாதுகாப்பிற்கு சவால் ஏற்படுகின்ற செயலிகள் இருப்பதாக அந்த சங்கம் அனுப்பிவைத்திருக்கும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
ஆகவே விரைவில் இதுபற்றி கவனம் செலுத்தி தடைசெய்ய வேண்டிய செயலிகளை உடனடியாக தடை செய்யும்படியும் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment