இசையின் அலை ஓய்ந்தாலும் நினைவுகள் எல்லோர் மனதிலும் ஒலிக்கும் : பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியமுக்கு மீஸான் அஞ்சலி


நூருல் ஹுதா உமர்-

ன்னம்பிக்கை, விடாமுயற்சி, தன்னடக்கம், போன்ற பல உயரிய குணாதிசயங்களுக்கு சொந்தக்காரனாக இருந்த பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு இசையின் நேசர்களுக்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். என அல்- மீஸான் பௌண்டஷன்- ஸ்ரீலங்கா வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ் இரங்கல் செய்தியில் மேலும் 1946 இல் பிறந்த பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்கள் தனது இறுதி மூச்சி முடியும்வரை 17 மொழிகளில் 41 ஆயிரத்திற்கும் மேலான பாடல்களை பாடியுள்ளார் என்பது சாதாரண விடயமல்ல. மிகப்பெரும் சாதனைகளுக்கு சொந்தக்காரனாக அந்த உலகப்பாடகன் ஆறு தடவைகள் தேசிய விருதையும் ஏழு தடவைகள் பிலிம்பேர் விருதுகளையும் வாங்கி அந்த விருதுகளுக்கே கௌரவம் சேர்த்துள்ளார் என்பது நிதர்சனமான உண்மை.

கொரோனாவின் பிடியில் தத்தளித்து தன்னுடைய ரசிகர்களின் சோக கண்ணீரில் இறைபாதமடைந்த அன்னாருரின் நினைவுகள் உலகின் பரப்பில் காற்றிருக்கும் வரை தொடரும். தன்னுடைய உருவத்தை போலவே மனதையும் பெரிதாக கொண்ட பாடும் நிலா பத்மவிபூஷண் எஸ்.பி பாலசுப்ரமணியம் அவர்களின் இழப்பு இசை உலகுக்கு ஈடு செய்யமுடியா துயரம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :