கல்முனையில் கடமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியவர் கைது -வீடியோ

பாறுக் ஷிஹான்-


டமை நேரத்தில் வைத்தியர் ஒருவரை தாக்கியதாக சந்தேக நபர் ஒருவரை கல்முனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் செவ்வாய்க்கிழமை(29) மதியம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வைத்தியசாலையில் ஆரம்ப சிகிச்சை பிரிவிற்கு காயம் ஒன்றிற்கு சிகிச்சைக்காக சென்ற இருவர் அங்கு கடமையில் இருந்த வைத்தியருடன் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் நோயாளியுடன் வந்த நபரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்ட பின்னர் ஏற்பட்ட வாக்குவாதம் சிறு கைகலப்பாக மாறியுள்ளது.

இதனால் சிறு காயங்களுக்கு உள்ளான வைத்தியர் அதே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் 41 வயதுடைய சந்தேக நபர் வைத்தியரின் முறைப்பாட்டிற்கமைய கைது செய்யப்பட்டு கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இன்று(30) கல்முனை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

குறித்த சம்பவத்தில் 43 வயதுடைய மருதமுனையை சேர்ந்த மருத்துவர் ஒருவரே காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :