சுகாதாரப் பிரிவினரால் நாட்டு மக்களின் சுகாதார நிலைமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்து சான்றிதழ் அளிக்கும் வரையில் விமான நிலையம் திறக்கப்படமாட்டாது என, சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் நாட்டினுள் கொவிட் 19 தடுப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
கம்பஹாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பின்போதே அமைச்சர் மேற்கண்டவாறு கருத்துத் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தொடர்ந்தும் அங்கு கருத்துத் தெரிவிக்கும்போது,
கடல் மார்க்கமாக இலங்கைக்கு பிரவேசிக்க முற்படும் இந்தியர்கள் தொடர்பில் தீவிரமாக அவதானிக்கப்பட்டுவருகிறது. அத்துடன், நாட்டினுள் கொவிட் 19 தொற்று மிகச்சிறப்பாகவும் கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.
0 comments :
Post a Comment