மருதமுனை இளைஞனுக்கு இளம் சாதனையாளர் விருது...

நூருல் ஹுதா உமர்-

ம்பாறை மாவட்டம் மருதமுனையைச் சேர்ந்த கமால்தீன் முஹம்மட் மிப்ராஸ் என்ற இளைஞருக்கு இளம் சாதனையாளருக்கான விருது இலங்கை சாதனையாளர் மன்றத்தினால் வழங்கி கெளரவிக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 19ம் திகதி கொழும்பு தாஜ்சமுத்ரா ஹோட்டலில் இடம்பெற்ற விருது வழங்கும் விழாவிலேயே இவ்விருது வழங்கிவைக்கப்பட்டுள்ளது. இவ்விமாவில் பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரியின் பழைய மாணவரும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் முகாமைத்துவபீடத்தின் மூன்றாம் வருட மாணவருமான இவர் "Graphics Hub" நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும் கிழக்கிலங்கையின் சிறந்த புகைப்படக்கலைஞரும் ஆவார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :