வெடித்த நிலையில் காணி ஒன்றில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்பு



பாறுக் ஷிஹான்-
வெடித்த நிலையில் காணி ஒன்றில் காணப்பட்ட கைக்குண்டு ஒன்றின் மேற்பகுதி மீட்கப்பட்டுள்ளது.
அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கல்லிரைச்சல் -2 பிரதேசத்தில் கடந்த சனிக்கிழமை(5) காணி ஒன்றில் கைக்குண்டு ஒன்று காணப்படுவதாக அப்பகுதி மக்களினால் தகவல் ஒன்று வழங்கப்பட்டிருந்தது.

இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு இராணுவத்தினர் விசேட அதிரடிப்படையினர் வருகை தந்திருந்ததுடன் குண்டு மீட்கப்பட்டது.

இவ்வாறு மீட்கப்பட்ட குண்டு வெற்று குண்டாக காணப்பட்டதுடன் ஏற்கனவே வெடித்திருந்த நிலையில் இருந்ததாக பாதுகாப்பு தரப்பினர் குறிப்பிட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :