முன்னாள் இராஜாங்க அமைச்சர் ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற தலைவர் அஷ்ரஃப் நினைவு தின நிகழ்வு



சர்ஜுன் லாபீர்-

றைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் 20 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு கத்தமுல் குர்ஆனும் துஆப் பிரார்த்தனையும் இன்று (16) புதன்கிழமை காலை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கல்முனை மக்கள் பணிமனையில் நடைபெற்றது.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும்,முன்னாள் இராஜாங்க அமைச்சரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம். ஹரீஸின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில் முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளரும்,முன்னாள் கல்முனை மாநகரசபை பிரதி மேயருமான ஏ.எல். மஜீட், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஏ.எம் ரோஸன் அக்தார்,ஏ.சி.ஏ சத்தார்,எம்.எஸ் நிசார்(ஜேபி),ஏ.எம் பைறோஸ்,எம்.எஸ் உமர் அலி,முன்னாள் மாநகர சபை உறுப்பினர் எம்.எம் முஸ்தபா,உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களான தேசமாணிய அல்ஹாஜ் ஏ.பி ஜெளபர்,எம்.எஸ் பழில், பீ.டி ஜமால்,மாளிகைக்காடு கிழக்கு வட்டார அமைப்பாள்ர் எம்.எஸ் நாஸர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம் ஹரிஸ் அவர்களின் இணைப்புச் செயலாளர் நௌபர் ஏ. பாவா, மெளலவி அல்ஹாஜ் எம்.எம் ஜமாலுடின்(ஹாஸிமி) கல்முனை ஜாமிஆ மன்பயில் ஹிதாயா அரபிக் கலாபீட மாணவர்கள் மற்றும் கட்சிப் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

இதன்போது மறைந்த பெருந் தலைவர் அஷ்ரஃப் அவர்களின் வாழ்க்கை வரலாறு பற்றி கட்சியின் தவிசாளர் ஏ.எல் மஜிட் அவர்களினால் சொற்பொழிவு நிகழ்த்தப்பட்டதுடன் மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் மறுமைவாழ்வின் ஈடேற்றத்திற்காக விஷேட துஆப் பிரார்த்தனை நடைபெற்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :