இந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ ம‌ரிக்கார் எம்பி இருப்ப‌து க‌வ‌லைக்குரியது!

ந்த‌ நாட்டு முஸ்லிம்க‌ளின் ஆடை எது என்று தெரியாத‌ ஒருவ‌ராக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் எஸ் எம் ம‌ரிக்கார் இருப்ப‌து க‌வ‌லைக்குரிய‌தாகும் என‌ அகில‌ இல‌ங்கை முஸ்லிம் க‌ட்சியின் த‌விசாள‌ர் ருஷ்தி நாசிர் MA தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து அண்மையில் தேசிய‌ உடை அணிந்து அத‌ற்கு மேலால் ச‌த்ரி எனும் ஆடை அணிந்து சென்ற‌ அதாவுள்ளாவை பார்த்து ஐ எஸ் ஐ எஸ் என‌ கொழும்பு மாவ‌ட்ட‌ பா. உறுப்பின‌ர் ம‌ரிக்கார் ச‌த்த‌மிட்ட‌து அவ‌ரின் ஐ எஸ் ஆடை எது என்ற‌ அறியாமையை காட்டுகிற‌து.

ஐ எஸ் என்ப‌து முற்றாக‌ ஒழிக்க‌ப்ப‌ட்ட‌ நிலையில் அவ‌ர்க‌ள் பெரும்பாலும் அர‌பிக‌ளாக‌வே இருந்த‌ன‌ர். அதாவுள்ளா அணிந்த‌ ஆடை என்ப‌து இல‌ங்கை, இந்தியா, பாகிஸ்தான் போன்ற‌ நாடுக‌ளில் பொது ம‌க்க‌ளின் ஆடையாகும். அந்த‌ ஆடை ஐ எஸ்ஸுக்கென்ற‌ த‌னியான‌ ஆடை என‌ அறிமுக‌ம் பெற்ற‌த‌ல்ல‌.

அதாவுள்ளாவின் ஆடை பாராளும‌ன்ற‌ ச‌ம்பிரதாய‌த்துக்கு மாற்ற‌மாக‌ இருப்பின் அது ப‌ற்றிய‌ ஒழுங்கு பிர‌ச்சினையை எழுப்பியிருக்க‌ முடியும். அத‌னை விடுத்து ஐ எஸ் ஐ எஸ் என‌ கூச்ச‌லிட்ட‌மை மிக‌ பெரிய‌ த‌வ‌றாகும். இத‌ற்காக‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ர் ம‌ரிக்கார் ப‌கிர‌ங்க‌மாக‌ ம‌ன்னிப்பு கேட்க‌ வேண்டும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :