கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் அவர்கள் சாய்ந்தமருது விஜயம்.



பாறுக் ஷிஹான்-

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கல்முனை தொகுதி பொறுப்பாளர் றிஸ்லி முஸ்தபா அவர்களின் அழைப்பினை ஏற்று அம்பாறை மாவட்டம், கல்முனை தொகுதிக்கு விஜயம் செய்த கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா ஜகம்பத் இன்று (15)மாலை சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலைக்கு விஜயம் செய்ததுடன் அபிவிருத்தி குழு ஏற்பாடு செய்த கூட்டத்திலும் கலந்து கொண்டார்கள்.

இதன்போது சாய்ந்தமருது மாவட்ட வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் வழங்கிய கோரிக்கைகளை ஏற்றுக் கொண்ட ஆளுனர் அவர்கள் விரைவில் இதற்கான பல்வேறு தீர்வுகளை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.

இந்நிகழ்வில் வைத்தியர்கள், சுகாதார வைத்திய அதிகாரிகள், வைத்தியசாலை அபிவிருத்தி குழு உறுப்பினர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :