"ஏழ்மை கல்விக்கு தடையல்ல" செயற்திட்டத்தின் மூலம் வெப்பம் அளவிடும் கருவி மற்றும் வரிய மாணவர்களுக்கு காசோலை வழங்கிவைப்பு.



நூருல் ஹுதா உமர்-

"ஏழ்மை கல்விக்கு தடையல்ல" எனும் செயற்திட்டத்தின் மூலம் அம்பாறை மாவட்ட நளிர் சமூக நல பௌண்டசனினால் சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரியில் மாதாந்த கொடுப்பனவை செலுத்த முடியாத மாணவர்களுக்கு காசோலை வழங்கும் நிகழ்வும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலயத்திற்க்கு வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் நிகழ்வும் நடைபெற்றது.

அவுஸ்திராலியாவில் வசிக்கும் நளீர் அபூபக்கரின் நிதி ஒதுக்கீட்டில் நடைபெற்ற காசோலை மற்றும் வெப்பம் அளவிடும் கருவி கையளிக்கும் இந்நிகழ்வில் நளிர் சமூக நல பௌண்டசனின் தலைவர் எம்.ஏ ரஹீம், சிரேஷ்ட ஆலோசகர் ஏ.நௌபார், பொருளாளர் எம்.சி பயாஸ் ஆகியோர் கலந்து கொண்டு சம்மாந்துறை அஸ் - ஸாலிஹாத் அரபுக் கல்லூரி அதிபரிடம் காசோலையையும், மத்தியமுகாம் ஸ்ரீ முருகன் தமிழ் வித்தியாலய அதிபரிடம் வெப்பம் அளவிடும் கருவியையும் கையளித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :