முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு நாவிதன்வெளி மக்களால் கெளரவிப்பு



சர்ஜுன் லாபீர்-
டந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,நாவிதன்வெளி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ் தலைமையில் சாளம்பங்கேணி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.

இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பைசால் காசிம்,முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் ஏ.சி நிசார்,பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் செயலாளர் நெளபர் ஏ பாவா,உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :