நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு வெற்றிபெற்ற பாராளுமன்ற உறுப்பினர்களை கெளரவிக்கும் நிகழ்வும்,நாவிதன்வெளி பிரதேச பாலர் பாடசாலை ஆசிரியர்களை கெளரவிக்கும் நிகழ்வும் இன்று நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி நவாஸ் தலைமையில் சாளம்பங்கேணி அமீர் அலி விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினரும்,முன்னாள் அமைச்சருமான அல்ஹாஜ் ரவூப் ஹக்கீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
இந் நிகழ்வில் கெளரவ அதிதியாக முஸ்லிம் காங்கிரஸின் பிரதித்தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி அல்ஹாஜ் எச்.எம்.எம் ஹரீஸ், முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் பைசால் காசிம்,முஸ்லிம் காங்கிரஸ் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் அல்ஹாஜ் ஏ.சி நிசார்,பாராளுமன்ற உறுப்பினர் ஹரீஸின் செயலாளர் நெளபர் ஏ பாவா,உட்பட கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment