தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் பாடசாலை உணவுக் குழுவினருடன் கலந்துரையாடல்.

எம்.பஹ
த் ஜுனைட்-

காத்தான்குடி பிரதேசத்தில் அதிகரித்துவரும் தொற்றா நோய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் காத்தான்குடி நகர சபை, காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகமும் இணைந்து பல் வேறு செயற்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக பாடசாலை மாணவர்களின் உணவு பழக்கவழக்கங்கள் தொடர்பில் பாடசாலை உணவுக்குழுவினருடனான கலந்துரையாடல் புதன்கிழமை (30) காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் காத்தான்குடி நகர சபை தவிசாளர் எஸ்.எச்.எம்.அஸ்பர், சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் யூ.எல்.எம்.நஸ்ருத்தீன் , பிரதேச கல்விப்பணிப்பாளர் எம்.எம்.எம்.கலாவுதீன் மற்றும் சுகாதார அதிகாரிகள், பாடசாலை அதிபர்,ஆசிரியர், நகர சபை உத்தியோகத்தர்கள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :