சாரா /புலஸ்தினியின் DNA பரிசோதனைக்கு மீண்டும் உத்தரவு..


J.f.காமிலா பேகம்-


சாய்ந்தமருது தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்ததாக கூறப்படும் சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் மரபணு பரிசோதனை அறிக்கையை, மீண்டும் ஆராய்ந்து மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு கல்முனை நீதவான் நீதிமன்றத்தின் நீதிபதி ஐ.என்.றிஸ்வான் முன்னிலையில், நேற்றைய தினம் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதன்போது சாரா எனப்படும் புலஸ்தினி மகேந்திரனின் தாயாரும் வருகை தந்திருந்ததாக எமது நீதிமன்ற செய்தியாளர் தெரிவித்தார்.

இதற்கமைய, அவரின் தாயாரை இன்றைய தினம் கொழும்பில் உள்ள அரச பகுப்பாய்வு பிரிவிற்கு அழைத்து சென்று, மரபணு பரிசோதனையைப் பெறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த கால விசாரணைகளில் சாரா புலஸ்தினியின் மரபணு பரிசோதனை ஒத்துப்போகவில்லை என அம்பாறை விசேட குற்றவியல் பிரிவின் அதிகாரி நீதிமன்றத்திற்கு தெரிவித்திருந்தார்.

இந்தநிலையிலேயே, மரபணுபரிசோதனை அறிக்கையை மீண்டும் ஆராய்ந்து மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :