J.f.காமிலா பேகம்-
கொரோனா வைரஸின் இரண்டாம் தாக்கம் உச்சமடைந்துவரும் நிலையில் ஸ்பெயின் அரசாங்கம் மீண்டும் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்திவருகிறது.
குறிப்பாக இந்த ஊரடங்குச் சட்டம் இரவுநேரங்களில் மாத்திரம் அமுல்செய்யப்படுகிறது.
இதன்படி அந்நாட்டு நேரப்படி இரவு 11 மணி தொடக்கம் காலை 06 மணிவரை இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் என ஸ்பெயின் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சுமார் 06 மாதங்களுக்காவது இந்த ஊரடங்குச் சட்டம் அமுலில் இருக்கும் எனவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment