அவரது சட்டத்தரணிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிவான் அவரை நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
கடந்த 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.
இந் நிலையில் இன்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை தொடர்ந்தும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் ஹம்தான் ஹுசைன் ஆகியோர் ஆஜராகினர்.
0 comments :
Post a Comment