ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 10வரை நீடிப்பு..

கை
து செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீனின் விளக்கமறியல் எதிர்வரும் நவம்பர் 10 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

அவரது சட்டத்தரணிகள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை மனுவை நிராகரித்த நீதிவான் அவரை நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

கடந்த 18 ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவி
னரால் கைது செய்யப்பட்டிருந்த ரிஷாத் பதியுதீன் இன்று 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார்.

இந் நிலையில் இன்றைய தினம் கோட்டை நீதிவான் நீதிமன்றில் அவர் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவரை தொடர்ந்தும் நவம்பர் 10 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
ரிஷாத் பதியுதீன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி அனுஜா பிரேமரத்ன, சிரேஷ்ட சட்டத்தரணிகளான சிராஸ் நூர்தீன் மற்றும் ஹம்தான் ஹுசைன் ஆகியோர் ஆஜராகினர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :