கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழப்பு



கொவிட் 19 தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இதுதொடர்பாக அரசாங்க தகவல் திணைக்களம் சற்று முன்னர் வெளயிட்டுள்ள ஊடக அறிக்கை பின்வருமாறு:

இன்று அதிகாலையில் குளியாப்பிட்டி வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிரிழந்த நோயாளி கொவிட் தொற்றுக்குள்ளான நோயாளி என பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்று முன்னர் உத்தியோகபூர்வமாக உறுதிசெய்தார்.
இந்த நோயாளி 56 வயதைக் கொண்ட பெண் ஆவார். அத்தோடு குளியாப்பிட்டி, ஊரலிய, கித்தலவ பிரதேசத்தைச் சேர்ந்தவரான இவர் அக்டோபர் மாதம் 14 ஆம் திகதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இருதய நோய் மற்றும் நீரிழிவு நோயினால் அவதிப்பட்டுள்ளதுடன், நோய் நிலைமை அதிகரித்தினால் இவர் உயிரிழந்துள்ளார்.
இது இலங்கையில் பதிவான 15ஆவது கொவிட் நோயாளியின் மரணமாக பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதி செய்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :