தலவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனை


க.கிஷாந்தன்-

லவாக்கலை மற்றும் கொட்டகலை ஆகிய பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களில் 28 பேரிடம் பீ.சீ.ஆர் பரிசோதனைக்கான மாதிரிகள் இன்று (31.10.2020) பெறப்பட்டன.

கொரோனா வைரஸ் தொற்றாளர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டு பீ.சீ.ஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இவர்கள் தலவாக்கலை – தெவிசிறிபுர, கொட்டகலை, வூட்டன் மற்றும் ரொசிட்டா, டிரேட்டன் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களாவர்.

கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில் இதுவரை கொரோனா தொற்றாளர்கள் அறுவர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

எனவே, பொது மக்கள் சுகாதார பாதுகாப்பு நடைமுறைகளை முழுமையாக பின்பற்றி வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்துவதற்கு ஒத்துழைப்பு வழங்கவேண்டும் என சுகாதார அதிகாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :