49 பொலிஸ் பிரிவுகளில் தொடர்ந்தும் ஊரடங்கு சட்டம்



MI.இர்ஷாத்-
நாடளாவிய ரீதியில் 49 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட் பகுதிகளில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் அமுலில் உள்ளதாக பிரதிப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் அவர் இதனை கூறியுள்ளார்.

கம்பஹா மாவட்டத்தின் 33 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், குளியாப்பிட்டி பகுதியின் 5 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் கொழும்பு நகரின் 8 பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள் மற்றும் களுத்துறை பிரதேசத்தின் பேருவளை அளுத்கம பயாகல ஆகிய 3 பொலிஸ் பிரிவுகளுக்கு இவ்வாறு தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படாத பகுதிகளில் வசிப்போர் கொரோனா தடுப்பு சுகாதார விதிமுறைகளை தொடர்ந்தும் பின்பற்றுமாறும் பிரதிப் பொலிஸ் மா அதிபர் வலியுறுத்தியுள்ளார்.
மேலும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள பகுதிகளுக்குள் பிரவேசிப்பதை தவிர்த்து செயற்படுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதனிடையே கொரோனா தடுப்பு சுகாதார வழிகாட்டல்களை மீறி செயற்படுபவர்களுக்கு எதிராக தனிமைப்படுத்தல் சட்டவிதிமுறைகளுக்கமைய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதிப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :