அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்பு!

பாறுக் ஷிஹான்-

க்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் பொலிஸ் பகுதிகளில் பாதுகாப்பு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதலில் சுமார் 6 க்கும் அதிகமான துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன.

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்ணகிபுரம் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சொட்கண் துப்பாக்கிகள் நேற்றும்(19) இன்றும் (20) மீட்கப்பட்டுள்ளது.

இவ்வாறு மீட்கப்பட்ட இவ்விரு துப்பாக்கிகளில் ஒன்று இங்கிலாந்து நாட்டு தயாரிப்பு என அக்கரைப்பற்று பொலிசார் குறிப்பிட்டனர்.

இதே வேளை திருக்கோவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காஞ்சினங்குடா பகுதியில் இராணுவத்தினருக்கு இன்று(20) காலை கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் உரப்பை மற்றும் மலைகளுக்குள் மறைத்து வைத்திருந்த சொட் கண் துப்பாக்கிகள் மீட்கப்பட்டு திருக்கோவில் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.

இதன் போது துப்பாக்கி மீட்பு சம்பவத்தில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை என்பதுடன் அக்கரைப்பற்று கண்ணகிபுர பகுதியில் இன்று மீட்கப்பட்ட துப்பாக்கி தொடர்பில் 43 வயதுடைய நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

அக்கரைப்பற்று பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :