எப்.முபாரக் -
திருகோணமலை மாவட்டத்தில் மீற்றர்ரான வாழ்க்கை வேலைத்திட்டம் இன்று(29) திருகோணமலை பஸ் நிலையத்தில் நடைபெற்றது.
கொரோனா தொற்றிலிருந்து பொது மக்களை தெளிவுபடுத்தும் நோக்கில் திருகோணமலை பிராந்திய சுகாதார திணைக்களம்,இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் பொலிஸாரும் இணைந்து இவ்வேலைத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்தார்கள்.
"தும்மல் இருமல் வந்தால் உள்முழங்கையை பாவித்திட நல்ல மீற்றறாய் வாழ்வோம் எனும் தொனிப்பொருளில் இவ் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டது.
பொது மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் வகையிலும் பயணிகள் பஸ் வண்டிகள்,வங்கிகள் மற்றும் பொது இடங்களிலும் ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டன.
இந்நிகழ்வில் திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகார் எம்.ஏ.உதய கேமந்த,திருகோணமலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி துமிந்த ராசபக்ச,இளைஞர் சேவைகள் மன்ற அதிகாரி ரவிக்குமார் பொலிஸார் உத்தியோகத்தர்கள் எனப்பலரும் கலந்து கொண்டார்கள்.
0 comments :
Post a Comment