தனிமைப்படுத்தலில் இருந்த நபர் மரணம்-மொனராகலையில் பரபரப்பு


J.f.காமிலா பேகம்-

கொரோனா தொற்றுடைய பெண் ஒருவருடன் நெருக்கமாக இருந்த வயோதிபர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவம் மொனராகலை வல்கொல்ல பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

4ஆம் திகதி கொழும்பிலிருந்து மொனராகலைக்கு தனியார் பஸ் ஊடாக பயணித்த பெண்ணுக்கு தொற்று பரவியுள்ளமை உறுதிசெய்யப்பட்டது.

இதனால் அவருடன் நெருக்கமாக இருந்த 70 வயது ஏ.என் லொக்குபண்டா என்கிற நபர் அவரது இல்லத்திலேயே தனிமைப்படுத்தி வைக்கப்பட்டார்.

இந்நிலையில், மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் நேற்று இரவு 7 மணிக்கு அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்த நபரது மரணத்திற்கு கொரோனா காரணமா என்பது பற்றிய பரிசோதனைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :