ஓட்டமாவடியில் பிசிஆர்.பரிசோதனை..

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

கொரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்களை பாதுகாத்து கொள்ளும் நோக்கில் அரசாங்கத்தினால் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதனடிப்படையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் விசேட வேலைத்திட்டங்கள் இடம்பெற்று வருகின்றது இதன் ஓர் அங்கமாக ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகம் தம்புள்ளை வியாபார மத்திய நிலையம், கம்பஹா மாவட்டத்திற்கு சென்று வந்தோர் மற்றும் சிகை அலங்காரம் செய்பவர்களுக்கு இன்று பி.சி.ஆர். பரிசோதனைகள் இடம்பெற்றன.

இதில் 25 பேருக்கு இன்று அவர்களின் மாதிரிகள் பெறப்பட்டு பரிசோதனைகளுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக டாக்டர் எம்.ச்.எம்.தாரிக் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :