கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயறு செய்கைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ வைக்கப்பட்டுள்ளதால் பல ஏக்கர் பயறு செய்கை சாம்பலாகியுள்ளன.



எப்.முபாரக்-
திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் பயறு செய்கைகளுக்கு இனந்தெரியாதோரால் தீ இன்று(1) வைக்கப்பட்டுள்ளதால் பல ஏக்கர் பயறு செய்கை சாம்பலாகியுள்ளன.
கந்தளாய் பேராறு பகுதியில் அமைந்துள்ள வயல் நிலங்களில் விவசாயிகள் பயறு செய்கைகளை மேற்கொண்டு வருகின்ற நிலையில் இவ்வாறு இனந்தெரியாதாரால் தீ வைக்கப்பட்டுள்ளன.
தற்போது பயறு செய்கை அறுவடை செய்து வருவதோடு ,அறுவடைக்கு தயாரான பல ஏக்கர் செய்கைகள் தீயில் கருகியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இதில் சுமார் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் செய்கை பண்ணப்பட்ட பயறு செய்கைகள் சாம்பலாகியுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். இவை தொடர்பாக கந்தளாய் பொலிஸ் நிலையத்தில் விவசாயிகளினால் முறைப்பாடும் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவம் தொடர்பான விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :