ஆளுங் கட்சியில் அங்கம் வகிக்கும் பிரதான கட்சிகளின் மூன்று தலைவர்கள் கொழும்பில் விசேட ஊடகவியலாளர் சந்திப்பை நடத்தி பகிரங்க அறிவிப்பை வெளியிடவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ நாணயக்கார உள்ளிட்டவர்களே இந்த ஊடக சந்திப்பை நடத்தவிருப்பதாகவும் கூறப்படுகின்றது.
குறிப்பாக இந்த மூன்று உறுப்பினர்களும் 20ஆவது திருத்த யோசனையிலுள்ள இரட்டைப் பிரஜாவுரிமை விவகாரத்திற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருபவர்கள்.
அந்த வகையில் இன்றைய ஊடக சந்திப்பில் 20ஆவது திருத்த யோசனையில் தங்களது முடிவுகளை அவர்கள் அறிவிக்கவுள்ளதாக எதிர்பார்க்கப்படுகின்றது
0 comments :
Post a Comment