கிழக்கில் கொரோனாத் தொற்று அரைச்சதத்தை பூர்த்தி செய்தது!

காரைதீவு சகா-

கிழக்கு மாகாணத்தில் கொரோனாத்தொற்றுகளின் எண்ணிக்கை அரைச்சதத்தை பூர்த்திசெய்தது. கிழக்கில் இதுவரை 53பேர் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களில் மினுவாங்கொட கொத்தணி மூலமாக நால்வரும் பேலியகொட கொத்தணி மூலமாக 49பேரும் தொற்றுக்கிலக்காகியிருந்தனர்.

கிழக்கில் வாழைச்சேனை கோறளைப்பற்று மத்திபிரிவில் அதிகூடிய தொற்றுக்கள் 26 இனங்காணப்பட்டிருந்தன. இறுதியாக மூதூரில் மூவரும் கிரான் பிரிவில் முறக்கொட்டாஞ்சேனையில் ஒருவரும் பொத்துவிலில் இருவரும் சாய்ந்தமருதில் ஒருவருமாக
புதிதாக இனங்காணப்பட்டிருநதனர்.

அம்பாறை மகாஓயா தெஹியத்தகண்டிய மற்றும் கந்தளாய்ப்பிரிவில் இனங்காணப்பட்ட கொரோனாத் தொற்றாளர் நால்வரும் மினுவாங்கொட கொத்தணிமூலம் தொற்றுக்குள்ளானவர்கள். ஏனைய 49பேரும் பேலியகொட மீன்சந்தைகொத்தணியில் பாதிக்கப்பட்டவர்களாவர்.

கிழக்கிலுள்ள ஜந்து கொரோனா சிகிச்சை நிலையங்களில் தற்போது 476கொரோனாத் தொற்றாளர்கள்; சிகிச்சை பெற்றுவருகின்றனர். நேற்று(28.10.2020) வரை 495பேர் மேற்படி 5 வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 17பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.இருவர் இடமாற்றப்பட்டுள்ளனர்.

காத்தான்குடி சிகிச்சை நிலையத்தில் நேற்றுவரை 180பேர் அனுமதிக்கப்பட்டு 17பேர் குணமடைந்து வெளியேறியதால் தற்போது 161பேர் தங்கியிருந்து சிகிச்சைபெற்று வருகின்றனர். இருவர் இடமாற்றப்பட்டிருந்தனர்.

மேலும் ஈச்சிலம்பற்று சிகிச்சை நிலையத்தில் 92 பேரும் கரடியனாறு சிகிச்சை நிலையத்தில் 87 பேரும் பதியத்தலாவ சிகிச்சை நிலையத்தில் 65பேரும் பாலமுனை சிகிச்சை நிலையத்தில் 71 பேரும் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

இதுவரை கிழக்கில் சந்தேகத்திற்கிடமான 2335பேரில் 1200பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

இதேவேளை கிழக்கிலுள்ள 11 தனிமைப்படுத்தல் நிலையங்களில் 1679பேர் அனுமதிக்கப்பட்டு 1585பேருக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டிருந்தது. 93பேருக்குச் சாதகமான அதாவது தொற்றுறுதி செய்யப்பட்டிருந்தது. 143பேர் குணமாகிவீடு திரும்பியுள்ளனர். எனவே தற்போது மேற்படி 11நிலையங்களிலும் 1443பேர் தனிமைப்படுத்தலுக்குட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :