அம்பாறையில் மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக மதில் உடைந்து விழுந்துள்ளது-இருவர் பலி


பாறுக் ஷிஹான்-

திக மழைவீழ்ச்சி மற்றும் இடிமின்னல் காரணமாக மதில் உடைந்து விழுந்துள்ளது.

அம்பாறை மாவட்டம் கல்முனை பன்சாலை வீதியில் உள்ள மதில் இவ்வாறு வெள்ளிக்கிழமை(30) இரவு உடைந்துள்ளது.

இவ்வாறு உடைந்துள்ள மதிலின் சேதங்களினால் போக்குவரத்து செய்வதில் மக்கள் சிரமங்களை எதிர்கொண்டுள்ளனர்.

இதே வேளை கல்முனை கிறின்பீல்ட் தொடர்மாடி குடியிருப்பிலும் இடி மின்னல் காரணமாக தீப்பரவல் ஒன்று ஏற்பட்டதுடன் இதனால் எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.உடனடியாக சம்பவ இடத்திற்கு வருகை தந்த கல்முனை மாநகர தீயணைப்பு பிரிவு பரவியிருந்த தீயினை கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்திருந்தது.

மேலும் அம்பாறை மாவட்டத்தில் ஏற்பட்ட பாரிய இடி மின்னலில் திருக்கோவில் பிரதேச விநாயகபுரத்தை சேர்ந்த கணவனும் மனைவியும் பலியாகியுள்ளனர்.

இச்சம்பவம் இன்று(30) வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்றது.

விநாயகபுரம் தபாலக வீதியைச் சேர்ந்த 46 வயதுடைய லோகநாயகம் யோகேஸ்வரன் மற்றும் அவரது மனைவி காசிப்பிள்ளை ஜெயசுதா (வயது 46) ஆகிய தம்பதிகளே இவ்விதம் மின்னல்தாக்கி பரிதாபகரமாக பலியானவர்களாவார்.

இவர்கள் விவசாயிகளாவர். இவர்களுக்கு மூன்று பிள்ளைகளுண்டு. சடலம் திருக்கோவில் ஆதாரவைத்தியசாலைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

திருக்கோவில் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.மாலை 6 மணிமுதல் மாவட்டமெங்கும் பாரிய இடி மின்னலுடன் கனமழை பொழிந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :